Skip to main content

Posts

Showing posts from 2020

Ayyappanum Koshiyum : Movies

ஐயப்பனும் கோஷியும் Ayyappanum Koshiyum Malayalam 2020 Thriller - Drama இருவேறு துருவங்கள் சரியான இடத்தில் சந்தித்துக்கொண்டால் என்னென்ன நடக்கும்? அதுதான் திரைப்படம். ஐயப்பன் எனும் உதவி ஆய்வாளர் கோஷி எனும் குரியனை சட்டப்படி கண்டிக்கிறார். அது தண்டனையாக மாறும்போது கோஷி யார் என்பது தெரிய வருகிறது. அதன்பின் ஐயப்பன் என்னவானார், கோஷி அவரை என்ன செய்தார், கோஷியின் அதிகார பலம் அவரை என்னவெல்லாம் செய்தது, ஐயப்பனின் சட்டம் அவரை காப்பாற்றியதா, இறுதியில் வெற்றி பெற்றது ஐயப்பனா கோஷியா என ஒரு Egoist கதையாக சிம்பிளாக முடிய வேண்டிய கதை, இதையெல்லாம் தாண்டி பல விஷயங்களைப் பேசுகிறது. அது தான் திரைக்கதை. கோஷியை எதிர்த்து ஒரு சாதாரண ஐயப்பனால் என்ன செய்ய முடியும் என்று நினைக்க நாம் துவங்கும்போது ஐயப்பன் யார் என தெரிய வருகிறது. அதன் பின் தொடர்ந்து வேகமெடுக்கிறது படம். பாடல்கள் அருமை. குறிப்பாக, https://www.youtube.com/watch?v=mR2wpadUDUA . காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.   படம் முடியும்போது திரைக்கதை சிலிர்க்கிறது. ஒரு நல்ல உணர்வு ஏற்படுவது உறுதி. ஐயப்பனாக 'பிஜூ மேனன்' கலக்கியிருக்கிறார். அவ்வேடத்தில...

பெங்களூர் பாரும் மாரல் போலீசுகளும்

எனது பேஸ்புக் பதிவின் தமிழ் பதிவை சில தோழர்கள் கேட்டிருந்தனர். அதனை வலைப்பூ பதிவாகவே இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி பதிவிடுகிறேன். https://www.facebook.com/jayreborn/posts/3082126921841772 பெங்களூருவில் நேற்று பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் பதிவுகள் வெகு சிலரால் பரப்பப்பட்டு பகிரப்பட்டு வந்தன. அவர்களுக்கு கடை வாசலில் இவ்வளவு பேர் வரிசையில் நிற்பது பிரச்சனையில்லை. அதில் பெண்கள் நிற்பது தான் கண்களை உறுத்துகிறது. பெங்களூரில் சட்டம் படிப்பதற்காக சென்றிருந்தபோதும், நண்பர்களை காண்பதற்காக சென்றிருந்தபோதும் அடிக்கடி பார்த்து வியந்த ஒரு விடயம், அலுவலகங்களின் வெளியே நின்று தம்மடிக்கும் பெண்கள். இதெல்லாம் பல காலமாக பெரு நகர கலாச்சாரத்தில் இருந்தாலும் நமது பிற்போக்கு பார்வைகளும், சிந்தனைகளும் அதை பார்த்ததுமே ஆச்சரியத்திற்கும் தீர்ப்புகளுக்குமே கொண்டு செல்கின்றன. 

Anjaam Pathiraa (2020) Malayalam

Anjaam Pathiraa Malayalam 2020 Thriller Anjaam Pathiraa, அஞ்சாம் பாதிரா, (The fifth midnight - ஐந்தாம் நள்ளிரவு)  

பிரதர் காலிங் : ஊர் கதை

'என்ன பிரதர் எப்படியிருக்கீங்க? கொரோனாலாம் நலமா?' பிரதர் ஜோஸ்பியிடமிருந்து கால். 'நல்லாருக்கேன் பிரதர். அங்க எப்படி?' 'எல்லாம் நல்லாருக்கோம்' என்று சுற்றங்களை, கொரோனா நிலவரங்களை விசாரித்துவிட்டு அப்படியே வரும்போது ஆன் த வேயில் நினைவுக்கு வந்தார் தாஸ் மாமா. அவரொரு இங்கிலீஷ் டீச்சர். 'ஆமா மாமா என்ன பண்றார்? என்ன ஆனார்?' , நான். 'அவரு ஊருக்கு போயிருப்பார் இந்நேரம்?' 'எதே இந்த நேரத்திலியா?' 'ஆமாண்டா. அவரு சுத்தி வர, பஞ்சாயத்து பண்ணிட்டு திரிய ஊரு பக்கம் தான் சரி வரும்' 'பெரிய மைனரு'