Skip to main content

Posts

பாவம் கருப்பு!

இருப்பதிலேயே பாவப்பட்ட மனிதர்கள் இந்த கடவுள் மறுப்பாளர்கள் தான்.  மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இவர்களுக்கு மதவாதிகள், சாதியவாதிகள், சனாதனிகள், Just Spiritual, Cosmic Energy சீடர்கள், இறை நம்பிக்கையாளர்கள், அரை குறை நம்பிக்கையாளர்கள், கொஞ்சூண்டு நம்பிக்கையாளர்கள், Pseudo Science பேசுபவர்கள், ஆதி யோகிகள், சங்கிகள், மென்சங்கிகள், வருங்கால சங்கிகள் என எல்லா பக்கமும் அடி விழுவது ஜகஜம். எந்த பக்கமும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், எல்லா பக்கமும் விரோதம் இருக்கும், வீட்டில் கூட விழாக்களுக்கு அழைக்க மாட்டார்கள், கண்டுகொள்ள மாட்டார்கள், 24x7 கண்காணிப்பு பட்டியலிலேயே இருப்பார்கள். வேலை என்றால் இன்னும் சிறப்பு. அவர்கள் இருக்கும் இடமெல்லாம் பதற்றமான பகுதியாகவே கருதப்படும். எப்படா சிக்குவான் ஆப்பு வைக்கலாம் என்று ஒரு கூட்டமே 'கமான் கமான்' என்று காத்திருக்கும். பகுத்தறிவை முன்னிலைப்படுத்திய பெரியார் இருந்தபோதே இவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு, கல்வி முன்னுரிமை, வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருந்தால் இவர்களுக்கான வாழ்வாதாரமும் எதிர்காலமும் உறுதியாகியிருக்கும். பகுத்தறிவுவாதமும் இன
Recent posts

Wikipedia Celebrates Women!

விக்கிப்பீடியா 19 இலட்சம் வாழ்க்கை வரலாறுகளை கொண்டுள்ளது. அதில் 20% பெண்களுடையது. ஆனால், பெண்களைப் பற்றிய பல தலைப்புகள் இன்னமும் முழுமையாக தொகுக்கப்படாமல், முடிக்கப்படாமல் உள்ளன. விக்கிப்பீடியாவை முழுமையான ஒரு அறிவு சார் தளமாக கொள்ள வேண்டுமென்றால் இவை முழுமையடைய வேண்டும். பெண்கள் தினத்தை முதன்மைப்படுத்தி பாலின வேறுபாடுகளை களையவும், ஒடுக்கப்பட்ட குழுக்களை முன்னிலைப்படுத்தவும், பலரை பிரதிநிதிப்படுத்தவும் இம்முயற்சியை விக்கிப்பீடியா எடுத்துள்ளது. இவை தொடர்பாக பல நிகழ்வுகள் உலகம் முழுக்க நடைபெற்று வந்தாலும், மெய்நிகராக மொழிபெயர்ப்பு, கட்டுரை எழுதுதல் என பங்களிக்க விரும்புகிறவர்களையும், குறிப்பாக, Content Writing - Content Editors போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமுடையவர்களையும், ஏற்கனவே என் பதிவுகளில் இத்தகைய ஆர்வத்தை வெளிப்படுத்தியவர்களையும் இதில் பங்களிக்க அழைக்கிறேன். நீங்கள் நேரடியாகவோ அல்லது எங்களுடன் இணைந்தோ தமிழ், ஆங்கிலம், இந்தி அல்லது பிரெஞ்சு விக்கிப்பீடியாவில் பங்களிக்கலாம். மொழிபெயர்ப்பு அல்லது கட்டுரைகள் மட்டும் எழுதி, தொகுத்து பங்களிக்க விரும்புகிறவர்களும் இணையலாம்

Ayyappanum Koshiyum : Movies

ஐயப்பனும் கோஷியும் Ayyappanum Koshiyum Malayalam 2020 Thriller - Drama இருவேறு துருவங்கள் சரியான இடத்தில் சந்தித்துக்கொண்டால் என்னென்ன நடக்கும்? அதுதான் திரைப்படம். ஐயப்பன் எனும் உதவி ஆய்வாளர் கோஷி எனும் குரியனை சட்டப்படி கண்டிக்கிறார். அது தண்டனையாக மாறும்போது கோஷி யார் என்பது தெரிய வருகிறது. அதன்பின் ஐயப்பன் என்னவானார், கோஷி அவரை என்ன செய்தார், கோஷியின் அதிகார பலம் அவரை என்னவெல்லாம் செய்தது, ஐயப்பனின் சட்டம் அவரை காப்பாற்றியதா, இறுதியில் வெற்றி பெற்றது ஐயப்பனா கோஷியா என ஒரு Egoist கதையாக சிம்பிளாக முடிய வேண்டிய கதை, இதையெல்லாம் தாண்டி பல விஷயங்களைப் பேசுகிறது. அது தான் திரைக்கதை. கோஷியை எதிர்த்து ஒரு சாதாரண ஐயப்பனால் என்ன செய்ய முடியும் என்று நினைக்க நாம் துவங்கும்போது ஐயப்பன் யார் என தெரிய வருகிறது. அதன் பின் தொடர்ந்து வேகமெடுக்கிறது படம். பாடல்கள் அருமை. குறிப்பாக, https://www.youtube.com/watch?v=mR2wpadUDUA . காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.   படம் முடியும்போது திரைக்கதை சிலிர்க்கிறது. ஒரு நல்ல உணர்வு ஏற்படுவது உறுதி. ஐயப்பனாக 'பிஜூ மேனன்' கலக்கியிருக்கிறார். அவ்வேடத்தில

பெங்களூர் பாரும் மாரல் போலீசுகளும்

எனது பேஸ்புக் பதிவின் தமிழ் பதிவை சில தோழர்கள் கேட்டிருந்தனர். அதனை வலைப்பூ பதிவாகவே இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி பதிவிடுகிறேன். https://www.facebook.com/jayreborn/posts/3082126921841772 பெங்களூருவில் நேற்று பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் பதிவுகள் வெகு சிலரால் பரப்பப்பட்டு பகிரப்பட்டு வந்தன. அவர்களுக்கு கடை வாசலில் இவ்வளவு பேர் வரிசையில் நிற்பது பிரச்சனையில்லை. அதில் பெண்கள் நிற்பது தான் கண்களை உறுத்துகிறது. பெங்களூரில் சட்டம் படிப்பதற்காக சென்றிருந்தபோதும், நண்பர்களை காண்பதற்காக சென்றிருந்தபோதும் அடிக்கடி பார்த்து வியந்த ஒரு விடயம், அலுவலகங்களின் வெளியே நின்று தம்மடிக்கும் பெண்கள். இதெல்லாம் பல காலமாக பெரு நகர கலாச்சாரத்தில் இருந்தாலும் நமது பிற்போக்கு பார்வைகளும், சிந்தனைகளும் அதை பார்த்ததுமே ஆச்சரியத்திற்கும் தீர்ப்புகளுக்குமே கொண்டு செல்கின்றன. 

Anjaam Pathiraa (2020) Malayalam

Anjaam Pathiraa Malayalam 2020 Thriller Anjaam Pathiraa, அஞ்சாம் பாதிரா, (The fifth midnight - ஐந்தாம் நள்ளிரவு)  

பிரதர் காலிங் : ஊர் கதை

'என்ன பிரதர் எப்படியிருக்கீங்க? கொரோனாலாம் நலமா?' பிரதர் ஜோஸ்பியிடமிருந்து கால். 'நல்லாருக்கேன் பிரதர். அங்க எப்படி?' 'எல்லாம் நல்லாருக்கோம்' என்று சுற்றங்களை, கொரோனா நிலவரங்களை விசாரித்துவிட்டு அப்படியே வரும்போது ஆன் த வேயில் நினைவுக்கு வந்தார் தாஸ் மாமா. அவரொரு இங்கிலீஷ் டீச்சர். 'ஆமா மாமா என்ன பண்றார்? என்ன ஆனார்?' , நான். 'அவரு ஊருக்கு போயிருப்பார் இந்நேரம்?' 'எதே இந்த நேரத்திலியா?' 'ஆமாண்டா. அவரு சுத்தி வர, பஞ்சாயத்து பண்ணிட்டு திரிய ஊரு பக்கம் தான் சரி வரும்' 'பெரிய மைனரு'

நல்லா இருந்த நாடும், நாலு பசு மாடும் ! - ஜே

நான் பாட்டுக்கு செவனேன்னு தான்டா இருந்தேன்னு ஒரு காட்சியில் வடிவேல் சொல்லுவார். அப்படித்தான் இருக்கு நம் நாட்டின் மக்கள் நிலைமையும். ஏதாவது ஒரு காரணம் காட்டி நம்மை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும் இவர்களின் சூட்சமம் தான் புரியவில்லை. ஜல்லிக்கட்டு, demonetization, நியூட்ரினோ, hydrocarbon துவங்கி தற்போது பசு மாடு வரை இவ்வளவு நாளாக இல்லாத பிரிவினைவாதம் - வன்முறை - படுகொலைகள் நவீன காலத்திலும் நடைபெறுவது உங்களுக்கு புரிகிறதா? இதெல்லாம் ஏன் நடைபெறுகின்றன, யாரால் நடைபெறுகின்றன என்று என்றாவது சிந்தித்ததுண்டா ?? ஆயிரமாயிரம் கேள்விகள்... தெலுங்கு படங்களில் கொடூரமான வில்லன்களை காட்ட கிராமப்புறத்திலிருப்பது போல களம் அமைப்பர். படிப்பறிவு இல்லாத இடங்களில் இவ்வளவு அக்கிரமங்கள் நடப்பது போல காட்டப்பட்டாலும், தற்காலத்தில் இவையெல்லாம் நம்மை சுற்றி நடப்பது போலவே தோன்றுகின்றன. ஏன் ?