'என்ன பிரதர் எப்படியிருக்கீங்க? கொரோனாலாம் நலமா?' பிரதர் ஜோஸ்பியிடமிருந்து கால். 'நல்லாருக்கேன் பிரதர். அங்க எப்படி?' 'எல்லாம் நல்லாருக்கோம்' என்று சுற்றங்களை, கொரோனா நிலவரங்களை விசாரித்துவிட்டு அப்படியே வரும்போது ஆன் த வேயில் நினைவுக்கு வந்தார் தாஸ் மாமா. அவரொரு இங்கிலீஷ் டீச்சர். 'ஆமா மாமா என்ன பண்றார்? என்ன ஆனார்?' , நான். 'அவரு ஊருக்கு போயிருப்பார் இந்நேரம்?' 'எதே இந்த நேரத்திலியா?' 'ஆமாண்டா. அவரு சுத்தி வர, பஞ்சாயத்து பண்ணிட்டு திரிய ஊரு பக்கம் தான் சரி வரும்' 'பெரிய மைனரு'