எல்லோரும் பெட்டி படுக்கையை அறைக்கு கொண்டுப் போய் வைத்துவிட்டு உடனே கோவில் குளம் என்று கிளம்பிட்டாங்க. நமக்குதான் ரொம்ப ஓவர் பக்தியாச்சே. ஊரை சுத்திப்பார்க்க கிளம்பிட்டேன். இதைத்தான் என் அம்மாவும், அப்பத்தாவும் சொல்லுவாங்க. ' ஊரு கிழக்கால போன்னா, நீ மேற்காலல போவ ' என்று. அதைக் கனக் கச்சிதமாக செய்து முடித்தேன். அதற்கு இன்னுமொரு காரணம், கோவில், பூசை மட்டுமல்ல. தங்கியிருந்த அறை இயேசுவை வைத்த கல்லறையை விட மிகச்சிறியதாக இருந்ததும், ஃபேன் கூட இல்லாததும் தான்.
~WoRK HaRD, Dream BiG ~